tamilnadu

img

மாணவர்களுக்கு நோட்டு- புத்தகம் வழங்கல்

சீர்காழி ஜூலை 14- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர் துவக்கப்பள்ளியில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் சூரியகாந்தி தலைமை வகித்தார். காமராஜ் வரவேற்றார். மாதிரவேளுர் முன்னாள் ராணுவ வீரரும் இயற்கை விவசாயியுமான ஜெயராமன், மாணவர்களுக்கும் தனது சொந்த செலவில் இலவச நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பேசினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;