tamilnadu

img

தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஆக.30-  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோ ட்டை பொன்னமராவதியில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணை எண் 145-ஐ பள்ளிக்கல்வி துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். குறுவள மைய தலைமை இடங்களாக மேல்நிலைப் பள்ளிகளை மாற்றக் கூடாது, தேசிய கல்வி கொள்கை வரைவு 2019 திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் சீ.ராஜகோபாலன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் சீ.மணிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் புவியரசு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.மகாலிங்கம், பழ.தேவேந்திரன், மூ.தேவகுமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் க.முத்துச்சாமி சிறப்புரையாற்றினார். வட்டார பொருளாளர் சுப.ஆனந்த் நன்றி கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு  உறுப்பினர்கள் இளவழகன் விஜயா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாவு, புஷ்பா மேரி, ஓய்வு பெற்ற மாவட்ட நிர்வாகிகள் ராமராசு, கோவிந்தசாமி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளரும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர்கள் பாலசந்திரன், பாரதி, விஜயா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சுப்பிரமணியன் தங் கத்தாய், வட்டார தலைவர்கள் பெரம்பலூர் அகிலன்,  பெரம்பலூர்(தனியார்) ரோவர் செல்வராஜ் ஜான், வேப்பந்தட்டை துரைராஜ், வேப்பூர் முருகேசன், ஆலத்தூர் அசோகன், வட்டாரச் செயலர்கள் பெரம்பலூர் சந்திரசேகரன், வேப்பந்தட்டை புகழேந்தி, வேப்பூர் மணிவண்ணன், ஆலத்தூர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் புகழேந்தி நன்றி தெரிவித்தார்.

கும்பகோணம்

கும்பகோணம், திருவிடை மருதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு வட்டாரத் தலைவர் ம.கோவிந்தராஜன், தலைமை வகித்தார் மாவட்டத் தலைவர் மா.கலைச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் தி.சரவணன் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதர், திருப்பனந்தாள் வட்டார செயலாளர் சுந்தர்ராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் ம.முருகானந்தம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன. நிறைவாக வட்டாரப் பொருளாளர் இரா.விஜயகுமார் நன்றி கூறினார்.

குடவாசல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்  வட்டார கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். இதில் அரசாணை 145 திரும்ப பெற வேண்டும். 10-க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார பொருளாளர் பாஸ்கர் நன்றியுரை ஆற்றினார்.