வலங்கைமான், மே 29-திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிதாலுகா ராதாநரசிம்மபுரத்தை சேர்ந்தவர் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்பன்னீர்செல்வம். இவருக்கு மலர்விழி என்ற மனைவியும் செல்வராணி, துர்கா,சோபியா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். பேராவூரணி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மக்களவைதேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 4-ம் தேதி சுவாமிமலைகாவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கு மே 25-ம் தேதி திடீரென மாரடைப்புஏற்பட்டது. பணியில் இருந்த காவல்துறையினர் அவரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான ராதாநரசிம்மபுரத்தில் நடந்த இறுதி சடங்கில் குண்டுகள் முழங்க காவல்துறையினர் அஞ்சலிசெலுத்தினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.ராதா, நகரச் செயலாளர் எஸ்.சாமிநாதன் முரளி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.