திருச்சிராப்பள்ளி, ஆக.29- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க திருவெறும்பூர் கைலாசபுரம் கிளை சார்பில் விஜயதாசன் எழுதிய ஒர் எழுதுகோலின் ஏக்கம் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதனன்று பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமுஎகச மூத்த தோழர் துரைராஜ் தலைமை வகித்தார். கவிதை நூலை கவிஞர் நந்தலாலா வெளியிட அதை விஜயதாசனின் பெற்றோர் கருப்பையன், கம்சலா பெற்றுக் கொண்டனர்.விழாவில் கவிஞர் நந்தலாலா, குறும்பட இயக்குனர் ஆருத்ரா சரவணன், முத்தமிழ் மன்ற பொதுச்செயலாளர் ராமஜெயம், மனமகிழ் மன்ற உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை தமுஎகச மாவட்ட பொருளாளர் காளிராஜ் தொகுத்து வழங்கினார். தமுஎகச மாவட்ட செயலாளர் ரங்கராஜன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.