tamilnadu

img

வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்க தேசிய மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20- வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா சார்பில் வெண்புள்ளிகள் குறித்த தேசிய மாநாடு வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெறுகிறது. வெண்புள்ளி உள்ள தாய், தந்தையருக்கு நல்லமுறையில் பிறந்த குழந்தைகள் மாநாட்டை துவக்கி வைக்கின்றனர். பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் வெண்புள்ளிகள் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்து பேச உள்ளனர். மேலும் வெண்புள்ளி உள்ளவர்களுக்கான 7வது சுயவரமும் நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து வெண்புள்ளிகள் கொண்டவர்கள் கலந்து கொள்கின்றனர். வெண்புள்ளிகள் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? சர்க்கரை வியாதிகள், தைராய்டு இருந்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்து மருத்துவர்கள் பவர்பாய்ண்ட் ப்ராக்ராம் மூலம் விளக்க உள்ளனர்.  வெண்புள்ளி இந்திய அளவிலான பிரச்சனை இல்லை. உலகளாவிய பிரச்சனை எனவே இந்த மாநாட்டில் வெண்புள்ளிகள் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெற லாம். மேலும் 98400 52464, 96001 58690 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வெண்புள்ளிகள் விழிப்பு ணர்வு இயக்கம்- இந்தியா செயலாளர் உமாபாதி கூறினார்.