tamilnadu

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு பயிற்சி முகாம்

மன்னார்குடி, ஆக.2- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியர்க ளுக்கான பயிற்சி முகாம் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பில் மன்னார்குடி நக ராட்சி நடுநிலைப்பள்ளியில் நடை பெற்றது. முகாமிற்கு மாவட்ட தலை வர் தை.புகழேந்தி தலைமை ஏற்றார். அறிவியல் இயக்க மன்னார்குடி கிளை செயலாளர் நூலகர் த.செல்வகுமார் வரவேற்றார். தேசிய குழந்தைகள் மாநாட்டின் ஆயத்தப் பணிகளில் அறிவியல் இயக்கத்தின் முன்னோடி நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர் யு.எஸ். பொன்முடி உரையாற்றினார். ஆசிரி யர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அலுவலர் இரா.மணி வண்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார். வட்டார கல்வி அலு வலர்கள் ப.அறிவழகன், முனைவர் தெ.ராமசாமி ந.பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் மா.தேவி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். முகாமி்ல் 135 ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.  நிறைவாக மன்னார்குடி அறிவியல் இயக்க தலைவர் ஆசிரியர் டி.இமா னுவேல் நன்றி கூறினார். இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை யும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரி மாற்ற குழுமமும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு ஏற்பாடுகளை தமிழ்நா ட்டில் அறிவியல் இயக்கம் கடந்த  26 ஆண்டுகளாக ஒருங்கிணைக்கிறது குழந்தைகள் மத்தியில் குழு செய ல்பாடுகள் கள அளவில் செயல்பாடுகள், சமூகப் பிரச்சனைகளுக்கு அறிவியல் முறையில் தீர்வு காண்பதே இதன் செயல்பாடுகளின் நோக்கமாகும்.  27-வது தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாட்டின் கருப்பொருளாக தூய்மையான, பசுமையான, வளமான தேசத்திற்கான அறிவியல் தொழி ல்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்பதை மையமாக வைத்து இரண்டு குழந்தைகள் வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். பயிற்சி முகாமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வா. சுரேஷ் ஒருங்கிணைத்தார். பயிற்சி யாளர்களாக பா.தண்டபாணி த.பெரு மாள்ராஜ், மாவட்ட கல்வி ஒருங்கிணை ப்பாளர் ராமமூர்த்தி அ.வீரரமணி ஆகி யோர் செயல்பட்டனர்.