tamilnadu

img

அரவக்குறிச்சி தொகுதியில் முருங்கை பதனிடும் ஆலை அமைக்கப்படும்

கரூர், ஏப்.27-அரவக்குறிச்சி தொகுதியில் முருங்கை க்காய் பதனிடும் தொழிற்சாலை கொண்டு வரப்படும் என்றார் திமுக வேட்பா ளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட சீத்தப்பட்டி, செல்லி வலசு, கோரையூத்து உள்ளிட்ட பகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்து மேலும் அவர் பேசுகையில், புதிய காவிரிக் குடிநீர் திட்டம் கொண்டு வந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இப்பகுதி முருங்கை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முருங்கை பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.பிரச்சாரத்தின் போது முன்னாள் அமை ச்சர் ம.சின்னசாமி, கரூர் மக்களவைத் தொ குதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதி மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ ட்டக்குழு உறுப்பினர் கே.வி.கணேசன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

;