திருச்சிராப்பள்ளி, செப்.4- மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சின்னசாமி நகர் கிளை சார்பில் புதனன்று மாலை மக்களை பிளவுபடுத்தும் மத வெறி பாசிச சக்திகளை தனிமைப்படுத்துவோம். இந்திய தேச த்தின் பன்முகத் தன்மையை பாதுகாப்போம். மதநல்லி ணக்கம் வளர்த்து மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற உறுதி மொழியை முன்வைத்து தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சின்னசாமி நகர் கிளைத்தலைவர் முஹமதுமஜித் தலை மை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி மாவட்டச் செயலா ளர் ரபிக், மாதர் சங்க ஜங்சன் பகுதி செயலாளர் வள்ளி ஆகி யோர் பேசினர். பிரச்சாரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் கலந்து கொண்டனர்.