tamilnadu

img

மன்னார்குடி மதிலழகு

மன்னார்குடி மதிலழகு திருவாரூர் தேரழகு வெறும் எதுகை மோனையிலமைந்த இசை வாக்கியங்கள் மட்டுமல்ல. மன்னார் குடி மதிலழகு புராதான கட்டிட எழிற்கலையின் ஒரு சின்னம் திருவாரூர் தேரழகு.  உலகில் மிகப்பெரும் மரத் தேரின் சிற்பக்கலை. இவைகள் மனித படைப்பாற்றலின் எழில் கலை வடிவங்கள். மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலின் மதிலழகை   வெளிப்பிரகாரத்தின் நடந்து கொண்டே ரசித்தால் தான் அழகு திருவாரூர் ஆழித்தேர் வெளி வீதியில் அசைந்து  நடந்து வரும் போது பார்த்தால் தான் அழகு. பசித்த மானுடம் புதினத்தின் படைப்பாசிரியர் தமிழாசிரியர் கரிச் சான்குஞ்சு தனது  மாணவர்களுக்கு 1965-ஆம் ஆண்டு வகுப்பறையில் கூறிய வாசகங்கள் இவை.

மன்னார்குடி பெரிய கோயிலின் வெளிப்பிரகாரத்தில்; நடந்து செல்லும் போது தொடர்ந்து வரும் உயர் மதில் மாடப்புறாக்களின் அகவும் ஒலியும் இலவம், மா தென்னை மரங்களில்  கத்தும் கிளிக்கூட்டமும் பார்க்கவும் கேட்க வும் மனதை வருடும். வெளிப்பிர காரத்தைச் சுற்றி வலம் வரும் பக்தர்கள் நடைபயிற்சியில் ஈடுபடு வோர் கூட்டம் சமீப காலமாக ஏராள மாய் பெருகி வந்தது. மேல கோபுர வாசலில் பையன்கள் பேட்மிட்டன் வாலிபால், வட கோபுரம் அருகே கபடி தென்கிழக்கு கலையரங்கம் அருகே மூச்சுப் பயிற்சி என நல அறிவியலில் மற்ற நகர கோயில்க ளுக்கெல்லாம் உதாரணமாக விளங்கியது. அதிலும் மார்கழி, தை மாதங்க ளின் பனி பொழியும் காலை நேரங்க ளில் பக்தர்கள்.   நடைபயிற்சியில் உள்ளோர், இந்துகள், முஸ்லிம் கள், கிறித்தவர்கள் என அனைவரது  வாழ்க்கையிலும் சிந்தனையிலும் மன்னார்குடி பெரிய கோயிலின் வெளிப்பிரகாரம் புதிய புதிய அத்தியாயங்களை எழுதி வந்தது. இந்தக் காவியமான கவின் அழகும் சுத்தமான காற்றும் மண்ணும் இப்போது மாறிக் கொண்டிருக்கி றது.

முன்பு பசு மாடுகளும் காளைக ளும் கன்றுகளும் கோவிலின் தேவைக்கேற்ப வடகிழக்கு கொட்ட டியில் இருந்தன. கோசாலயா என்று அவைகளின் எண்ணிக்கை 35 ஐ தாண்டியதால் வெளிப்பிரகா ரத்தின் தெற்கு வடக்கு ஆரம்பத்தில் பெரிய தட்டிகளை வைத்து கோயில் நிர்வாகம் அடைத்து அதில் கோயில்  மாடுகள் பிரகாரத்தில் எங்கும் மேய விடப்பட்டுள்ளன.  ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ராதாதாமோதரன் இவ்வாறு கூறினார். ‘‘வடகோபுர வாசலில் இருந்து 20 மீட்டர் வெகு அருகில் தான் எங்கள் வீடு உள்ளது. தாயார் சன்னதியும் ரம்மியமான வெளிப்பிரகாரமும் எங்கள் வாழ் நாளில் நிலைத்து நிற்பவை. இப்போது பிரகாரப் பாதை மேய்ச்சல் நிலமாக மாறி விட்டது. எங்கும் மாட்டின் சாணம். மழைக் காலத்தில் சாணியும் சகதியுமாய் அருவருப்பாக மாறி விட்டது.  இந்த அருவருப்புக்கு மத்தியில் அடைப்பை விலக்கிக் கொண்டு கோவிலை வலம்வரும் புதிய பக்தர்கள் காளை மாடுகளைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். கோசாலயாவிலிருந்து வழிந்து வரும் பசு மாடுகளின் சிறுநீர் பிரகா ரத்தில் கலக்கிறது. இதனால் பிர காரத்தை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிரகாரத்தின் தென்னந்தோப்பு பகுதி மட்டும் தனியாக அடைக் கப்பட்டு அதில் மாடுகளை அவிழ்த்து விட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். பழைய சுத்த மான கோயில் பிரகாரத்தின் நடை பாதை எங்களுக்கு வேண்டும்’’  என்றார்.

ஓய்வு பெற்ற அரசு மாவட்ட நலக் கல்வி பயிற்றுநர் ப. ராஜரெத்தி னம் கூறும்போது, ‘‘இந்த பிரச்சனை சமீபத்தில் தான். உரு வாகியிருக்கிறது. பிரகார நடை பாதையில் எங்கும்  மாட்டின் சிறுநீரும் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கும் சாணமும் காய்ந்து பொடியாகி  மண்ணோடும் கலந்து விடுகிறது. நடந்து செல்லும் போது எல்லோருக்கும் சுவாசம் பல மடங்கு அதிகரிப்பதால் சாண நுண் துகள்கள் நடப்பவர்கள் அறி யாமலேயே சுவாசத்தில் இழுக்கப் பட்டு ஒவ்வாமை சுவாசப் பிரச்ச னைகள் பலருக்கு  ஏற்படுகின்றன. எனவே பிரகார நடைபாதையில் மாடுகளை மேய விடக் கூடாது. வடக்கே தெற்கே மதிலை ஒட்டி னாற் போல் உள்ள தென்னந் தோப்பை மட்டும் அடைத்து அதில் மாடுகளை மேய விடுவது தான் கோயிலின் சுற்றுச்சூழலை பராமரிப்பதற்கும் தூய்மைக்கும் சரியாக  இருக்கும்’’ என்றார்.

ஓய்வு பெற்ற கால்நடைத் துறை இணை இயக்குநர் ஒருவர், ‘‘காரைக்குடியில் செட்டில் ஆகி விட்டாலும் சொந்த ஊர் எனக்கு மன்னார்குடி தான். புரட்டாசியில் முதல் மற்றும் கடைசி சனிக்கிழமை களிலும் வைகுண்டஏகாதேசி அன்றும் நானும் எனது மனைவி யும் தவறாமல் கோயிலுக்கு வரு வோம் இந்த புரட்டாசியில் பிரகார நடைபாதை முழுவதும் சாணம் நிரம்பிக் கிடந்தது. மாடுகள் நிறைய மேய்ந்து கொண்டிருந்தன. அந்த பழைய அழகு, சுத்தம் இப்போது இல்லை. வடக்கு கோபுரத்தின் அருகே ஒரு மாடு கழிச்சல் நோயால் எழ முடியாமல் டீ-ஹைட்ரேஷனில் இருந்ததை கவனித்தேன். சில மாடுகளின் உடல் நலம் குறைந்திருந்ததையும் கவனித்தேன். பக்தர்களில் பலர் பசுக்களுக்கு அரிசி, வெல்லம், அகத்திக்கீரை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அரிசி, வெல்லம் மாட்டிற்கு கொடுப்பது அபாயகரமானது. உடல் நலம் குறைந்த பசுக்களு க்கு குறிப்பிட்ட ஒரே நாளில்  அகத் திக்கீரை ஏராளமாக கொடுப்பதும் தவறு. கோயில் மாடுகள் ஆரோக்கி யமாக இருப்பது மாடுகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும்  நல்லது கழிச்சல் நோயுள்ள சிறுநீர் தொற்றுள்ள பசுக்களின் சாணம் சிறுநீர் நடைபாதையில் கிடந்தால் மனிதர்களுக்கும் கேடு தான். நம்பிக்கை என்பது வேறு நல அறிவியல் என்பது வேறு’’ என்று கூறினார்.

கோவில்களுக்கு வருவது மக்களின் கடவுள் வழிபாட்டு நம்பிக்கை மட்டுமல்ல; உடல் மற்றும் மன நலத்திற்கு ஆதரவான  உளவியல் நுட்பம் கொண்ட புத்துணர்வை அளிக்கும் சுற்றுலா பயணங்களாகும். சன்னதிக்கு சென்று விட்டு பிரகாரத்தில் வலம் வருவது தான் நீண்ட நெடுங்காலம் இருந்து வந்த நடைமுறை. இப்போது இந்த பாதை அடைக் கப்பட்டு மாடுகள் மேய விடப்பட் டுள்ளன. ட்ரக்குகள், கிரேன்கள் போன்ற அறிவியல் தொழில்நுட் பங்கள் இல்லாத காலத்தில் ஆயி ரக்கணக்கான தொழிலாளர்களின் உதிரத்திலும் உழைப்பிலும் உருவான கட்டிட எழிற்கலையின் மகத்தான படைப்புகள் தான்  இன் றைய கோயில்கள். இவை மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. பெரிய கோயில் பிரகாரத்தை தூய்மையாக பராமரிக்க கோயில் மாடுகளை பிரகார நடைபாதை யில் மேய விடுவதை தவிர்க்க  வேண்டும். பதிலாக எல்லோரும் விரும்புவதைப் போல தென்னந் தோப்பு பகுதிகளை அடைத்து அதில் கோயில் மாடுகளை மேய விட வேண்டும். குடும்பம் குடும்ப மாய் குழந்தைகளுடன் கோயி லைச் சுற்றி வலம் வரும் மக்களின் மகிழ்ச்சியை, உரிமையை, நடை பாதையை பயன்படுத்துபவர்கள் அனைவரின் விருப்பத்தையும் கோயில் நிர்வாகம் நிறை வேற்றுமா?

-நீடா சுப்பையா