tamilnadu

img

புகளூர் பகுதியில் செ.ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பு

கரூர், ஏப்.1-


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, தளாவாப்பளையம், அய்யம்பாளையம், புகளூர் நான்கு ரோடு, வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்கரூர் ஒன்றியக் குழு சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணிக்கு, புகளூர் நான்கு ரோட்டில் செங்கொடிஏந்தி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், வேட்பாளர் ஜோதிமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் அ.காதர்பாடஷா, கரூர் ஒன்றியச் செயலாளர் கே.சண் முகம் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;