புதுக்கோட்டை, பிப்.25- புதுக்கோட்டை மாவட் டம் மாத்தூர் அருகே லெட்சு மணப்பட்டியில் நடை பெற்ற ஜல்லிக்கட்டில் 610 காளைகள் அவிழ்த்துவி டப்பட்டன. ஜல்லிக்கட்டை இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தை சாமி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, சிவ கங்கை, திண்டு்க்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 610 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவ தற்கு 250 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட் டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரி மையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டன. பாதுகாப்பு பணி களை மாத்தூர் காவல்துறை யினர் மேற்கொண்டனர்.