tamilnadu

img

மூலங்குடி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

குடவாசல், ஏப்.30-குடவாசல் அருகே உள்ள மூலங்குடி சென்ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் மூலங்குடியில் அமைந்துள்ள சென் ஜோசப் மெட்ரிக் பள்ளி தேசிய கல்வி தரத்தில் சிறந்து திகழும் வகையில் சென் ஜோசப் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், கிராமப்புற மாணவர்கள் நலனுக்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது பத்தாம் வகுப்பில் பயின்ற மாணவர் ஏ.சர்வேஸ்வரன் 500-க்கு 483 மதிப்பெண் எடுத்தும், மாணவி எஸ்.சுபஸ்ரீ 500-க்கு 472 மதிப்பெண்ணும், மாணவர் வி.பிரசன்னா 500-க்கு 471 மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பள்ளி முதல்வர் ஜெசிந்தாமேரி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


;