tamilnadu

img

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்

புதுக்கோட்டை பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. வையாபுரிபட்டி, மயிலாடும்பாறை, முத்தையா செட்டியார் வீதி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வீடுகள் தோறும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பன்னீர்செல்வம், பழனிச்சாமி உள்ளிட்டோர் பணியாற்றினர்.

;