கரூர், நவ.18- உயர்மின் கோபுரத்துக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் மட்டுமே பதிக்க வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். நிலத்தை இழக்கும் அனைத்து உழவர்களுக்கும் 2013 ஆம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின்படி நிலத்தின் முழு மதிப்பை சந்தை விலையில் நிர்ணயம் செய்து நான்கு மடங்கு வழங்கிட வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டு மின்சாரம் சென்று கொண்டிருக்கும் திட்டங்களுக்கு கோபுரம் அமைந்துள்ள இடத்திற்கும் கம்பி செல்லும் இடத்திற்கும் மாத வாடகை நிர்ணயித்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி உயர் மின் கோபுரங்களுக்கு எதி ரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தின் கரூர் மாவட்டக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.ராஜ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ்.பொன்னுசாமி சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.இலக்குவன், மாவட்ட துணைத் தலைவர் கே.சக்திவேல், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் நன்மாறன், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் குப்புசாமி, நெடுங்கூர் ஊராட்சி முன்னாள் தலைவர் நல்லசிவம், சாமானிய மக்கள் கட்சி குணசேகரன்ஆகியோர் கோரிக்கைக ளை விளக்கி பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்க ளை எழுப்பினர்.