tamilnadu

img

தோழர் அசோக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 16-  திருநெல்வேலி வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்கை படுகொலை செய்த சாதி ஆதிக்க வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வாலிபர் சங்க ஒன்றிய, நகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.  முன்னதாக இறந்த தோழர் அசோ க்கிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வழக்கறிஞர் சி.சிவசாகர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.வேலவன் கண்டன உரை நிகழ்த்தினார். நகர தலைவர் மதன்சிங், ஒன்றிய துணை செயலாளர் டி.கோபி, அறிவழகன், ஆரோக்கியராஜ், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   இதே போல் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு தலைமையேற்றார். முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சாதிவெறியர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

திருச்சிராப்பள்ளி 

கட்சியின் காட்டூர் பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை அரியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கனல்கண்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சி.பாண்டியன், காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், காட்டூர் பகுதி செயலாளர் ஆதாம்தீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் கிளை செயலாளர்கள் முனியசாமி, கமாலுதீன், செல்வராஜ், கிச்சான், சந்திரா, சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.