tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் : விதொச முடிவு

ராப்பள்ளி, செப்.28- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி புறநகர் மற்றும் மாநகர் மாவட்டக் குழு கூட்டம் புறநகர் மாவட்டத் தலைவர் ஜே.சுப்பிரமணியண் தலைமையில் வெள்ளியன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் குடிமனைப்பட்டா, வீடு, முதியோர் பென்சன், உணவு பாதுகாப்பு, நூறு நாள் வேலை ஆகியவற்றை வலியுறுத்தி வரும் அக்டோபர் 11ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்தில் 9  தாலுகாக்களில் 15 மையங்களில் வருவாய்த்துறை அலு வலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. அக்டோபர் 21-ம் தேதி சமயபுரத்தில் மாநில மாநாடு நடத்துவது என்பன உள்படப் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், புறநகர் மாவட்டச் செயலாளர் அ.பழநிசாமி, மாநகர் மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் என்.தங்கதுரை மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் கே.செல்லம்மாள், பத்மினி, திலகவதி உள்படப் பலர் கலந்து கொண்டனர். 

;