திருச்சிராப்பள்ளி, ஜூலை 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி திரு வெறும்பூர் அடுத்த கிழக்குறிச்சி பஞ்சாயத்தில் புதிய கிளை துவக்க விழா புதனன்று நடைபெற்றது. விழாவிற்கு கனகவள்ளி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நடராஜன் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை யை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கிழக்குறிச்சி பஞ்சாயத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கி வேலை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை செயலாளராக பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சங்கிலிமுத்து, குருநாதன், சங்கர் மற்றும் கட்சியில் புதிதாக இணைந்த 30 பேர் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.