tamilnadu

img

சிபிஎம் பேரவைக் கூட்டம்

குடவாசல், ஜூலை 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருக்கண்ணமங்கையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி முன்னிலை வகித்தார்.  கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், நடந்து முடிந்த நாடாளுமன்ற  தேர்தல் முடிவுகளை கட்சி எடுத்த நிலைபாடுகள் பற்றி விளக்க உரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜி.தனுஷ்கோடி, கே.கோபிராஜ், கே.ஜோதிபாசு உள்ளிட்டோர் மற்றும் 10 கிளைகளை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதே போல் வலங்கைமான் ஒன்றியக் குழு சார்பில் எட்டு கிளை  உறுப்பினர்களுக்கான பேரவை கூட்டம் விருப்பாட்சிபுரம் ஊராட்சி பாதிரிபுரம் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சி.கருப்பையன் தலைமையில் நடைபெற்றது.  ஒன்றியச் செயலாளர் என்.ராதா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி விளக்கி பேசினார். ஒன்றிய குழு புனிதா, நகர செயலாளர் ச.சாமிநாதன். கிளை செயலாளர்கள் முரளி. பரமகுரு, பரமசிவம், சரவணன், தொழுவூர் கிளை கிருஷ்ணா மற்றும் கட்சி உறுப்பினர்கள் 40 பேர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கண்டிச்சான்காட்டில் கட்சி ஒன்றிய பேரவை ஞாயிறு அன்று நடைபெற்றது மனமேல்குடி ஒன்றிய செயலாளர் கரு இராமநாதன் தலைமை வகித்தார். அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா முன்னிலை வகித்தார் மத்திய, மாநில, மாவட்டக்குழு முடிவுகள் பற்றி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். நிறைவாக அறந்தாங்கி நகர செயலாளர் கே.தங்கராஜ் நன்றி கூறினார்.