tamilnadu

img

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி, அக்.30- இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தென்னூர் உழவர் சந்தை திறந்தவெளி திடலில் இருந்து தொடங்கியது.  இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் அரூப் சின்ஹா, சீஃப் ஜெனரல் மேனேஜர் டி.ஜி.நாகராஜன், சீஃப் டிவி~னல் திருச்சி மேனேஜர் பாபுநரேந்திரா ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேரணியை துவங்கி வைத்தார்.  இதில் பள்ளி மாணவ - மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர்.  உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரை 2 கி.மீ தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர்.