tamilnadu

img

தரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த தரை கடைகளை அகற்றிய மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையரை கண்டித்தும், சாலையோர வியாபாரிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு சட்டம் 2014-ஐ மதித்து நடக்க வலியுறுத்தியும் சிஐடியு தள்ளுவண்டி தரைக்கடை சங்க வியாபாரிகள் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று பொன்மலை கோட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு தரைக்கடை சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்டப் பொருளாளர் மணிகண்டன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணிமாறன், சிபிஎம் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.

;