tamilnadu

img

தோழர் உமாநாத் 7ஆம் ஆண்டு நினைவு தினம்... சிபிஎம் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி...

திருச்சிராப்பள்ளி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அரசியல் தலைமைக்குழு முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் ஆர். உமாநாத்தின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி திருச்சி பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரதுநினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் பொன்மலை பகுதிகுழு செயலாளர் கார்த்தி கேயன் தலைமை வகித்தார். 

மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, வழக்கறிஞர்கள் நிர்மலாராணி, ராஜ்குமார், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் மணிமாறன், டிஆர்இயு கோட்டச் செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உமாநாத் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;