tamilnadu

img

தோழர் கோ.வீரய்யனுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி

தஞ்சாவூர், நவ.18-  தோழர் கோ.வீரய்யன் முதலா மாண்டு நினைவுதினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அவரது உருவப் படத்திற்கு செவ்வணக்கம் செலுத்தப் பட்டது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில்,  பூதலூர்  அலுவலகத்தில் ஜீ.வி. உரு வப்படத்துக்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இ.முகமது சுல்தான், கே.ராஜகோபால், அஞ்சலி தேவி, கிளைச் செயலாளர் கள் ஆர்.கோவிந்தராஜ், பி.ராஜூ, அந்தோணிசாமி மற்றும் சோலை.தெட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை கட்சி அலுவல கத்தில் தோழர் ஜி.வி. முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத் தப்பட்டது. ஏ.கோவிந்தசாமி, மோரீஸ் அண்ணாதுரை, பாண்டியன், எஸ்.பால கிருஷ்ணன், நைனாமுகமது, அபெக்ஸ் சுரேஷ், முத்துலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அறந்தாங்கி

அறந்தாங்கி தாலுகா நாகுடி பேருந்து நிறுத்தம் அருகில் விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலா ளர் வி.ராசு தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா, விவசாய சங்க ஒன்றிய தலைவர் வி.லெட்சுமணன், ஒன்றிய செயலாளர் தர்மராஜ், வி.தொ.ச ஒன்றிய தலைவர் செல்லமுத்து, உள்பட திரளானோர் தோழர் கோ.வீரய்யன் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.    

திருச்சிராப்பள்ளி

தோழர் கோ.வீரய்யன் முதலா மாண்டு நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றிய பனமங்கலம் கிளை சார்பில் ஞாயிறு அன்று தோழர் கோ.வீரய்யன் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கட்சியின் மண்ணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், கிளை கோபால கிருஷ்ணன், சிவா, கார்த்திகா மற்றும் வி,தொசவினர் தோழர் வீரய்யன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் திங்களன்று தோழர் ஜீ.வீரய்யன் நினைவு புகழஞ்சலி சிறப்பு பேரவைக் கூட்டம் மணப்பாறை பி.ஆர்.சி நினைவரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வி.தொ.ச. ஒன்றிய செய லாளர் எம்.கண்ணண் தலைமை வகித்தார்.

விதொச மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், விதொச மாவட்டத் தலை வர் ஜே.சுப்பிரமணியன், மாவட்டச் செய லாளர் அ.பழநிசாமி, தவிச மாவட்டத் தலைவர் பி.ராமநாதன், மாவட்டச் செயலாளர் வி.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ராஜகோபால், மூத்த தலைவர் எஸ்.சோமசுந்தரம்,  கட்டுமான தொழி லாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பாலு ஆகியோர் தோழர் கோ.வீரய்யன் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.  சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சீனிவாசன், விதொச மாவட்டக் குழு உறுப்பினர் பத்மினி, ஒன்றிய தலைவர் கருப்பையா, ஒன்றிய பொருளாளர் தங்கராஜ், வையம்பட்டி விதொச ஒன்றிய செயலாளர் ராஜ் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தோழர் வீரய்யன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக தவிச ஒன்றிய செயலா ளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தவிச ஒன்றிய தலைவர் வெள்ளைச் சாமி நன்றி கூறினார். 

கும்பகோணம் 

தோழர் ஜி.வீரய்யன் நினை வேந்தல் நிகழ்ச்சியில் தஞ்சை மாவட் டக்குழு சார்பில் மலர் அஞ்சலி, வீர வணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பி னர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலா ளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், செந்தில்குமார், வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சா.ஜீவ பாரதி, பி.பார்த்தசாரதி, எஸ்.பழனி வேல், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் தோழர் ஜீ.வி நினைவிடத்திலும், திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய அலு வலகம் தோழர் பி.ஆர் நினைவகத்தி லும், கும்பகோணம் நகர சார்பில் சிஐடியு அலுவலகத்திலும் தோழர் ஜீவி உருவப் படத்திற்கு சிபிஎம் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். 

அரியலூர் 

ஜெயங்கொண்டம் ஒன்றியம் சின்னவளையம் விவசாய சங்க அலுவல கத்தில் தோழர் கோ.வீரய்யன் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகா ராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தி னார். கைத்தறி நெசவுத் தொழிலாளர் கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.என்.துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருமானூர் ஒன்றியத்தில் விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சவுரிராஜன் தலைமையில் தோழர் கோ.வீரய்யன் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் புனிதன், விவசாய சங்க ஒன்றியச் செய லாளர் ராஜு, ஒன்றிய குழு உறுப்பினர் ஏசுதாஸ், இந்திய வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சி, சங்க ஒன்றிய கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.