tamilnadu

img

கல்லூரி மாணவர் பேச்சுப் போட்டி

தரங்கம்பாடி, செப்.20- நாகை மாவட்டம்,பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது.“இன்றைய இந்தியாவின் பிரச்சனைகளும், அதன் தீர்வுகளும்”  என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி, செம்பனார்கோவில் கலைமகள் கல்லூரி,நாகை ஏடிஎம் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொண்டு பேசினர்.  தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுசிலா சலோமி, வரலாற்றுத்துறை பேராசிரியர் செல்வராஜ், இயற்பியல் துறை பேராசிரியர் சிவபாலன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. த.பே.மா.லு கல்லூரி அமைப்பாளர் நெல்சன் அமிர்தராஜ்  நன்றி கூறினார். இளையோர் செஞ்சிலுவை சங்கம் மாவட்ட அமைப்பாளர் முனைவர் ஜி.விக்டர் பாண்டியன் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார்.