திருச்சிராப்பள்ளி, பிப்சு.22- ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை அதானி நிறுவனத்திற்கு மடைமாற்றம் செய்ததை விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் புதனன்று பாலக்கரை ரவுண்டா னா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.