கும்பகோணம், மே 21- தொழிலாளர்களை வெளியேற்றி இயந்திரங்களை எடுத்துச் சென்ற கொரிய சோவல் பன்னாட்டு நிறுவனத்தின் அராஜகப் போக்கை தடுத்தசிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார் மீது காவல்துறையும் தமிழக அரசும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரிய நாட்டு முதலாளிகளுக்கு துணை போய் சிறையில் அடைத்த தொழிற்சங்க தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண் டும். அவாசின் மற்றும் ஷூண்டாய் சோவல் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகம் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து நடக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம்(சிஐடியு) சார்பில் கும்பகோணம் மைதீன் புகையிலை ஏஆர்ஆர் சீவல் கம்பெனி முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன்கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட் டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், நகர ஆட்டோ சங்கர் கவுரவத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் மைதீன், புகையிலை தொழிலாளர் சங்க கிளை-1 தலைவர் சண்முகம், கிளைச் செயலாளர் செந்தில், கிளை 2 தலைவர் கார்த்தி,செயலாளர் கணேசன், ஏஆர்ஆர் சிவல்கம்பெனி தொழிற்சங்க தலைவர் ஹாஜி, செயலாளர் சிவக்குமார் கமலம்மற்றும் சிஐடியு அனைத்து தொழிற் சங்க தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.