tamilnadu

மாணவரிடம் பணம் பறிப்பு

திருச்சிராப்பள்ளி, மே 26-திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திராயத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷ், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஓயாமரி சுடுகாட்டு சுரங்கபாதை வழியாக நடந்து வந்து போது மர்ம ஆசாமிகள் 4 பேர் விக்னேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.500, செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரில் கோட்டை காவலர்கள் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.