tamilnadu

பிஎஸ்என்எல் 4 ஜி சிம்கார்டு வெளியீடு

திருச்சிராப்பள்ளி, ஏப்.21- திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 4 ஜி சிம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 4 ஜி சிம்மை, மாநில முதன்மை பொதுமேலாளர் ராஜூ வெளியிட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் சேகரன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் திருச்சி முதன்மை பொதுமேலாளர் வினோத், பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;