tamilnadu

ஆடுதுறையில் ரத்த தான முகாம்

கும்பகோணம், ஏப்.6-


கும்பகோணம் அருகே ஆடுதுறையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ம.க.ராஜாவின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் முகாம் நடைபெற்றது. முகாமை கோவிந்தபுரம் விட்டல்ருக்மணி சமஸ்தான ஸ்தாபகர் விட்டல் தாஸ் மகாராஜ் தொடங்கி வைத்தார். இதையடுத்து வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு குமார் தலைமை வகித்தார். குடந்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், திருவிடைமருதூர் சட்டமன்றஉறுப்பினர் கோவி.செழியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜாங்கம் ராமநாதன், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், அதிமுகவேட்பாளர் ஆசை மணி, அதிமுக, தேமுதிக, திமுக, பாஜகஒன்றிய பொறுப்பாளர்கள், தொழிலதிபர் கும்பகோணம் ராயா கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி செயலாளர் ஷாஜகான், மூத்த வழக்கறிஞர் லோகநாதன், செஞ்சிலுவை சங்க தலைவர் பாஸ்கரன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக ம.க.ராஜா நினைவு அறக்கட்டளை தலைவர் ம.க.ஸ்டாலின் வரவேற்றார். பாலதண்டாயுதம் நன்றிகூறினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, தஞ்சை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி, தஞ்சைஇந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மருத்துவ குழுவினர் 300க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்த தானம் பெறப்பட்டது. வாசன் கண் மருத்துவமனை சார்பில் 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

;