tamilnadu

img

நாகையில் இரத்ததான முகாம்

நாகப்பட்டினம்: நெல்லை மாணவர் சங்க நிர்வாகி, தியாகி தோழர் அசோக் நினைவாகவும், டிசம்பர்-3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்ற, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நாகை மாவட்ட இரத்ததானக் கழகம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நாகை மாவட்டச் சங்கம் ஆகியவற்றின் சார்பில், நாகை அரசுத் தலைமை மருத்துவமனையில், சனிக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவக்குமார், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், பொருளாளர் டி.வெங்கட்ராமன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.கனி, பொருளாளர் ஆர்.தாமரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.வடிவேல் வரவேற்றார்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகைமாலி இரத்ததான முகாமைத் துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். நாகை அரசுத் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் எம்.ஏ. மொகிதீன் அப்துல்காதர், மருத்துவமனை முகாம் அலுவலர் எஸ்.முருகப்பன், இரத்ததான வங்கி பொறுப்பாளர் ஆர்.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாலிபர் சங்கம் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சியாமளா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.அருள்தாஸ், ஆர்.சதீஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.ராஜா, பி.விஜயேந்தி ரன், பி.எம். நன்மாறன், டி.சந்திரகுமார், வி.முருகானந்தம், எம்.எஸ்.ஜோதிநாதன், எம்.எஸ்.பிரபாகரன், ஜி.சிந்தன், எஸ்.மாலா, எஸ்.கண்மணி, எம்.எஸ்.பிரபு, ஜே.மேனகா மற்றும் பலர் உள்ளிட்டோர் இரத்ததானம் வழங்கினர்.மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஏ.சிக்கந்தர், ஆர்.சண்முகம், ஏ.அருள்ராஜ், வி.எஸ். ராஜேந்திரன், என்.பன்னீர்செல்வம், ஆர்.சந்தானம், டி.துரைராஜ், ஆர்.சுரேஷ், பி.அசோக்குமார், கே.செந்தில், ஏ.தவமணி, பி.நீலகண்டன், ஏ.மகாலிங்கம் உள்ளிட்டோர் குருதிக்கொடைவழங்கினர். செயலாளர் கே.சண்முகம் நன்றி கூறினார்.