tamilnadu

ஆக்கூர் ஓரியண்டல் பள்ளி சாதனை

தரங்கம்பாடி, மே 3-நாகை மாவட்டம் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை, வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களை பள்ளியின் தாளாளர் இக்ரம் ரசூல், தலைமையாசிரியர் ஷாஜகான், மௌலானா அபுல்கலாம் ஆசாத், கிராம கமிட்டி தலைவர் சிகாபுதீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

;