tamilnadu

img

எடுத்துக்கட்டியில் வேளாண் கண்காட்சி

தரங்கம்பாடி, செப்.14- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூரில் வேளாண் கண்காட்சி சனியன்று நடைபெற்றது. காரைக்கால் நேரு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள், நெல் ஜெயராமன் இயற்கை விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய கண்காட்சியை பூம்புகார் எம்.எல்.ஏ.,பவுன்ராஜ் துவக்கி வைத்தார்.  வேளாண் கல்லூரி மாணவி சரண்யா வரவேற்புரை யாற்றினார்.  வேளாண் உதவி இயக்குநர் தாமஸ் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் முனைவர் பார்த்தசாரதி, ஷேக் அலாவுதீன், இயற்கை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பரணி, செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை உரங்கள், தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையம் என 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றன. ஏராளமான விவசாயிகள், மாணவர்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். நிறைவாக மாணவர் நவீன் பிரசாத் நன்றி கூறினார்.