tamilnadu

சாலை விபத்தில் 3 பேர் பலி

மண்ணச்சநல்லூர், ஏப்.1-

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் டிராக்டரில் சமயபுரம் நோக்கி திங்களன்று அதிகாலை புறப்பட்டனர். அப்போது அதிகாலை 5.30 மணிக்கு தச்சன்குறிச்சி பிரிவு ரோடு அருகேடிராக்டர் மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து மோதியது. இதில் பி.கே.அகரத்தைச் சேர்ந்த முத்துசெல்வம்(30), கவியரசு(35), ஜான்சன்துரை(30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 11-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்திவேல்(40) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

;