tamilnadu

img

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக திகழ்ந்த என்.வி..... எஸ்.ஏ.பெருமாள் புகழாரம்....

திண்டுக்கல்:
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்தவர் என்.வரதராஜன் என்றுகட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் புகழாரம் சூட்டினார். 

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.வரதராஜனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன் னிட்டு திண்டுக்கல்லில் சனிக்கிழமை பேரவை நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள் கலந்து கொண்டு பேசியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமமக்களின் போர்வாளாக இருக்க வேண்டும். அந்த காலத்திற்காக தாம் ஏங்குவதாக அடிக்கடி கூறுவார். கிராம மக்கள்,நகர மக்கள்  இலவசங்களால் ஆளப்படுபவர்கள். நலத்திட்டங்களின் மயக்கத் தில் இருக்கிறார்கள். அதன் விளைவு தான் இன்றைக்கு ஓட்டுக்கு பணம் கேட்கிறார்கள். கிராமப்புற மக்களின் மனதில் நாம் நீங்கா இடம் பிடிக்க என்னசெய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார். அவர்களை மீட்க அறிவுப் புரட்சி நடத்த வேண்டியுள்ளது என்பார் என்.வி. தீக்கதிர் நாளிதழுக்கும் தன் இறுதி காலம் வரை பொறுப்புவகித்தார். மதுரை பதிப்பு மட்டுமல்லாது சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி என நான்கு பதிப்புகளாக தீக்கதிர் வளர்ச்சி பெற்றுள்ளதுஅருந்ததியர் மக்களுக்காக மூன்றுசதவீத உள் ஒதுக்கீட்டை பெறுவதற்காக பல போராட்டங்கள் நடத்தப் பட்டன. இது தொடர்பாக கலைஞரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி மூன்று சதவீத உள் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தார். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்றளவும் அருந்ததியர் மக்கள் மனதில் என்.வி. நீங்கா இடம் பிடித்துவிட்டார். தோழர் என்.வியை அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களான ஜக்கையனும், அதியமானும் எங்களின் கடவுளாக மதிக்கிறோம் என்று கூறும் அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக ஒரு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் இருந் தார் என்றால் அது என்.வரதராஜன் தான் என்றார்.

பேரவையில் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, கே.பாலபாரதி,  ஆர்.மனோகரன். மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டக்குழு அலுவலகத்தில் என்.வரதராஜன் உருவப்படத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகர்செயலாளர் பி.ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பாளையம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில்மாநிலக்குழு உறுப்பினர்  கே.பாலபாரதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முத்துச்சாமி  வ.கல்யாணசுந்தரம், ஒன்றியச் செயலாளர்கள் அஜாய்கோஷ், ஏ.ராஜரத்தினம், என்.வி.குடும்பத்தினர் மருமகள் வனிதா, பேரன்ராகுல், சஞ்சீவி, உள்ளிட்ட பலர் அஞ்சலிசெலுத்தினர்.

;