tamilnadu

விவசாய மின் மோட்டார் திருட்டு 

வேடசந்தூர், மே 24- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கரையாம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கவுண்டப்பன் . இவருக்கு சொந்த விவசாய நிலம் ஊருக்கு அருகே எரியோடு-கோவிலூர் சாலையோரத்தில் உள்ளது.மதியம் மாட்டு தீவனம், பயிருக்கு விவசாய கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது ரூ .35 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து எரியோடு காவல்நிலையத்தில் கவுண்டப்பன் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;