tamilnadu

img

திண்டுக்கல்லில் பிரகாஷ்காரத்திடம் ரூ.10 லட்சம்  தேர்தல் நிதி வழங்கல்:

திண்டுக்கல்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் ரூ.10 லட்சம் பிரகாஷ்காரத்திடம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். நகர் செயலாளர் ஆசாத் வரவேற்றார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், கே.பாலபாரதி, என்.பாண்டி, ஆகியோர் பேசினர். ஒன்றியச்செயலாளர் தா.அஜாய்கோஷ் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் பங்கேற்றனர். 

;