tamilnadu

img

தருமபுரி திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

தருமபுரி, ஏப்.16-மலைகிராம பழங்குடி மக்களுக்கு சிறுதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரூர் (தனி), சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் , தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோரைஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாக்குசேகரிப்புபிரச்சாரம் நடைபெற்றது. இதில், மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, மலைகிராம மக்களுக்கு குடிநீர், சாலை, பேருந்து, கல்வி, சுகாதாரம் , சித்தேரிமலைப்பகுதியில் புளிவிளைச்சல் அதிகமாக இருப்பதால் புளிபதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவேண்டும். குள்ளம்பட்டியில் ஆரம்ப துணை சுகாதாரநிலையம் அமைக்கப்படும், அங்கன்வாடி மையம் அமைக்கப்படும், எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.என கேட்டுக்கொண்டார்.அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தேரி ஊராட்சிசேலூர், அம்மாபாளையம், கருக்கன அள்ளி, குள்ளம்பட்டி,சண்முகாபுரம், முல்லைநகர், மாலக்கல், மங்கப்பட்டி ஆகிய மலைகிராம பழங்குடி மக்களிடம் வாக்குசேகரித்தனர்.இதில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, எஸ்.பி.சின்னராசு, ஒன்றியகுழு உறுப்பினர்கள் கே.என்.ஏழுமலை, எஸ்.கே.கோவிந்தன், ஏ.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;