பென்னாகரம், ஆக.7- பரிசல் இயக்க முடியாத காலங்களில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஒனேக்கல் பரிசல் இயக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளம் நீர்வீழ்ச்சியில் பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி தொழி லாளர்களுக்கான சிறப்பு பேரவைக் கூட்டம் சிஐடியு சார்பில் நடைபெற்றது. இந்த பேரவைக் கூட்டத்திற்கு பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் வரதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.நாகராஜ், மாவட்ட செயலாளர் சி.நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் சி.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசி னர். நீர் வளத்திற்கு ஏற்ப ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் 3 வழித்தடங்களில் பரிசிலை இயக்க அனுமதி வழங்க வேண்டும். தண்ணீர் அதிகம் வரும் காலங்களில் பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது பரிசல் ஓட்டும் தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இப் பேரவையில் 50க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.