tamilnadu

சத்துணவு ஊழியர் சங்க  மாநில பிரதிநிதித்துவப் பேரவை  தருமபுரியில் இன்று துவக்கம்

 தருமபுரி, ஆக. 29- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநித்துவப் பேரவை ஆகஸட் 30,31 ஆகிய தேதிகளில் தருமபுரி கேபிஜே தங்கமணி திருமண மாஹாலில் நடை பெற உள்ளது.  இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமை வகித்தார். வரவேற்ப்புகுழு தலை வரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவருமான எம்.சுரு ளிநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ஆ.செல்வம் துவக்க உரை யாற்றுகிறார். மாநிலப் பொதுச்செயலாளர் இரா.நூர் ஜஹான், மாநில பொருளாளர் பே.பேயத்தேவன் ஆகி யோர் அறிக்கையை முன்வைக்க பிரதிநிதிகள் விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க  மாநிலபொதுச்செயலாளர் ச.பாபு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் க.ஜோதி பாபு, தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சு.பார்த்திபன், ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பாளர் ஜி.வெங்கட்டேசன், தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைசெயலாளர் எம்.கிரிஜா சிறப்புரையாற்றுகிறார். முடிவில், அரசு ஊழி யர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு நிறை வுறையாற்றுகிறார்.

;