மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரியில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இதில் ஒரு பத்தாண்டு சந்தா, 45 ஆண்டுசந்தா உள்ளிட்ட 61 சந்தாவிற்கான தொகை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் வழங்கப் பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே. விசுவநாதன், எம்.மாரிமுத்து, ஆர்.சிசுபாலன், எஸ்.கிரைஸாமேரி, தருமபுரி நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி கே.குப்பு சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.