தருமபுரி, மே 11-தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மறுவாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 23 ஆம்தேதியன்று நடைபெறவுள்ளது.இதையொட்டி வாக்கு எண்ணும்மையத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும்தருமபுரி நாடாளுமன்ற தொகுதி,பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றஇடைத்தேர்தல்மறுவாக்குப்பதிவு வருகின்றமே 19 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதையொட்டி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சிருமான எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பேசியதாவது, மறுவாக்குப்பதிவு நடைபெறும் மே 19 ஆம் தேதியன்று 8 வாக்குப்பதிவு மையங்களில் முழுமையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெப்கேமரா அமைத்து முழுமையான வீடியோ பதிவு செய்யப்படும். வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் கைபேசி பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும்வட்டாட்சியர் நிலையில் அலுவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.மே 23 ஆம் தேதியன்று வாக்குஎண்ணிக்கை தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் வரவேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் பட்டியலை வாக்கு எண்ணும் நாளுக்கு குறைந்தபட்சம் 3 தினங்களுக்கு முன்னர் வழங்கிட வேண்டும். முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். வேட்பாளர்களின் முகவர்களுக்கு உணவுவசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9200 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது என இவ்வாறு பேசினார்.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார்ஆட்சியர் ம.ப.சிவன் அருள், அரூர்தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.