tamilnadu

img

அரசுப் பேருந்துகள் நவீனம்: ஜெர்மன் நிதி

 சென்னை, நவ. 2- தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ரூ. 1,580 கோடியை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரி வித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயண மாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர்  ஏஞ்சலா மெர்க்கல், தில்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்கு வரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப்  பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து  580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார். தில்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்து களை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசி யத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் ஜெர்  மனி பிரதமர் குறிப்பிட்டார்.