tamilnadu

img

டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாம்

புதுக்கோட்டை, நவ.4- தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மமோகிராம் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான கருவியின் இயக்கத்தை அவர் துவக்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் மாநிலம் முழுமைக்கும் தொடர்ந்து முகாம் நடத்தி வருகிறார்கள். ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

;