இந்தாண்டும் பொய்த்துப்போகும் குறுவை சாகுபடி..?
ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறைகூட ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டும் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஜுன் முதல் வாரத்திற்கு பிறகுதான் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே போதிய மழை பெய்து கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் சென்று அம்மாநில அணைகள் நிரம்ப பல நாட்களாகும் நிலை உள்ளது. இம்மழை மூலம் கர்நாடக மாநில அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும். இதுவரை அவ்வாறு தான் கிடைத்து வந்தது. இதன்பிறகே மேட்டூர் அணைக்கு போதிய நீர் கிடைத்தது. அது காவிரி டெல்டா விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.தற்போது மேட்டூர் அணைக்கு ஜுன் 12-ம் தேதிக்கு முன்னதாக போதிய நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே நடப்பாண்டு குறுவை சாகுபடி காவிரி டெல்டாவில் மேற்கொள்ள இயலாது. இதன் மூலம் 8-வது ஆண்டாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை பொய்த்துப் போகும் அபாயம் எழுந்துள்ளது.இந்நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீரை நம்பி ஆழ்குழாய் கிணறுகள் வைத்துள்ள கொஞ்ச நஞ்சம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இப்பயிர்களுக்கு தண்ணீர் தேவை. ஆனால் தற்போது வெப்பம் அதிகரித்து கடும் வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர் மட்டமும் மளமளவென குறைந்து வருகிறது. 200 அடியில் நீர் கிடைத்து வந்த ஆழ்கிணறுகள் எல்லாம் தற்போது 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது.இதனால் தற்போது பம்புசெட் மூலம் நடவு செய்யப்படும் குறுவை பயிர்களுக்கு அறுவடை வரை தண்ணீர் கிடைக்குமா?
குடிநீரும் இல்லை
இப்போது வரை டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் சாகுபடிக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் நிலத்தடி நீர் மிக வேகமாகவும், அதிகளவிலும் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் அதளபாதாளத்திற்கு செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் தமிழக அரசு எந்தளவிற்கு இதில் கவனம் செலுத்தப்போகிறது என்ற பெரும் அதிருப்தியில் டெல்டா பகுதி மக்கள் உள்ளனர். குறுவைப் பருவமும் வந்துவிட்ட நிலையில் தண்ணீர் பெரும் பிரச்சனையாக உள்ளதால் என்ன செய்வது என்பது தெரியாமல் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.
மாற்றுப் பயிர் செய்ய ஆலோசனை
இந்நிலையில் காவிரி டெல்டா மூத்த வேளாண் வல்லுநர் குழு ஒருங்கிணைப்பாளர் - கூறும்போது, “வரும் குறுவை பட்டத்தில் அதிக நீர் தேவையுள்ள நெல் பயிர் பயிரிட்டால் நிலத்தடி நீர் குறைந்து குறுவை மகசூல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய 1200 எம்.எம் தண்ணீர் தேவைப்படுகிறது. இதே மாற்று பயிர்களான உளுந்து, எள்ளு, பயறு வகைப் பயிர்கள் இதே அளவு தண்ணீர் கொண்டு 4 ஏக்கரில் சாகுபடி செய்துவிட முடியும். நிகர லாபமும் கூடுதலாக கிடைக்கும். நெல் சாகுபடி செய்தால் அறுவடை வரை போதிய தண்ணீர் கிடைக்குமா என்பது உறுதியில்லை. எனவே விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதே சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.கஜா புயலுக்குப் பிறகு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை. அப்படியே மழை பெய்தாலும் மண் குளிரும் அளவிற்கு பெய்ய வேண்டும். அதற்கு இயற்கை கருணை காட்ட வேண்டும். தற்போது நடுவர் மன்றத் தீர்ப்பின் படி மே மாதம் வரை நமக்குத் தர வேண்டிய தண்ணீரை உடனடியாகப் பெற வேண்டும். இதற்கு மாநில அரசும் மத்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சம்பா சாகுபடி செய்வதற்காவது தண்ணீர் கிடைக்கும் என்ற வாய்ப்பு ஏற்படக் கூடும்.இப்போது மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள மோடி விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படுவாரா? புதிய முயற்சிகளில் ஈடுபடுவாரா? அல்லது பழைய மாதிரியே விவசாயத்தையும் விவசாயிகளையும் நட்டாற்றில் விடுவாரா? என்பது போன்ற பேச்சுக்கள் டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படியே நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமும் இருக்காது; விவசாயிகளும் இருக்க மாட்டார்கள். காவிரி டெல்டா உலக அளவில் பெரும் கேள்விக்குறியாக மாறிவிடும்.
இந்நிலையில் காவிரி டெல்டா மூத்த வேளாண் வல்லுநர் குழு ஒருங்கிணைப்பாளர் - கூறும்போது, “வரும் குறுவை பட்டத்தில் அதிக நீர் தேவையுள்ள நெல் பயிர் பயிரிட்டால் நிலத்தடி நீர் குறைந்து குறுவை மகசூல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய 1200 எம்.எம் தண்ணீர் தேவைப்படுகிறது. இதே மாற்று பயிர்களான உளுந்து, எள்ளு, பயறு வகைப் பயிர்கள் இதே அளவு தண்ணீர் கொண்டு 4 ஏக்கரில் சாகுபடி செய்துவிட முடியும். நிகர லாபமும் கூடுதலாக கிடைக்கும். நெல் சாகுபடி செய்தால் அறுவடை வரை போதிய தண்ணீர் கிடைக்குமா என்பது உறுதியில்லை. எனவே விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதே சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.கஜா புயலுக்குப் பிறகு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை. அப்படியே மழை பெய்தாலும் மண் குளிரும் அளவிற்கு பெய்ய வேண்டும். அதற்கு இயற்கை கருணை காட்ட வேண்டும். தற்போது நடுவர் மன்றத் தீர்ப்பின் படி மே மாதம் வரை நமக்குத் தர வேண்டிய தண்ணீரை உடனடியாகப் பெற வேண்டும். இதற்கு மாநில அரசும் மத்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சம்பா சாகுபடி செய்வதற்காவது தண்ணீர் கிடைக்கும் என்ற வாய்ப்பு ஏற்படக் கூடும்.இப்போது மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள மோடி விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படுவாரா? புதிய முயற்சிகளில் ஈடுபடுவாரா? அல்லது பழைய மாதிரியே விவசாயத்தையும் விவசாயிகளையும் நட்டாற்றில் விடுவாரா? என்பது போன்ற பேச்சுக்கள் டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படியே நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமும் இருக்காது; விவசாயிகளும் இருக்க மாட்டார்கள். காவிரி டெல்டா உலக அளவில் பெரும் கேள்விக்குறியாக மாறிவிடும்.
இராமநாதபுரம்
4 தொகுதிகள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 தொகுதி கடற்கரைப்பகுதியாக இருந்தாலும் தண்ணீர் கண்ணீராகத் தான் இருக்கிறது. முதுகுளத்தூர் பகுதி நீரின்றி வறண்டு கிடக்கிறது. சிக்கல் என்ற கிராமத்தின் நீராதார மாக இருக்கும் பாண்டியன் கண்மாய் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த கண்மாயை நீராதாரமாக கொண்டு 7 கிராமங்களில் சுமார் 8800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகிறார்கள். ஆனால் கண்மாயில் நீர் இல்லாமல் வறண்டு போய் அதில் வாழும் மீன்கள் கருகி கருவாடாகிவிட்டன. மீனிற்கே இந்த நிலைமை என்றால் வசிக்கும் மனிதர்களுக்கு என்ன நிலை? சிக்கல் கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள காலனிப்பகுதியில் 90 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தண்ணீர் எடுக்க செல்லவேண்டுமென்றால் (பாண்டியன் கண்மாய்க்கு செல்ல) சுமார் 5 கி.மீ நடக்க வேண்டும். அதிகாலை 2லிருந்து 3 மணிக்கு தண்ணீர் எடுக்க செல்கிறார்கள். 2 மணி நேரம் பயணம் செய்து கண்மாயில் குழி தோண்டி 1 அல்லது2 குடங்கள் மட்டுமே அந்த குழியிலிருந்து எடுக்கமுடியும் என்று சொல்கிறார்கள். சில நேரங்களில் அந்த தண்ணீர் கூட கிடைக்காமல் வெறும் குடத்துடன் திரும்பி வரும் அவலநிலையை மக்கள் கண்ணீரோடு தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அதிகாலையில் தண்ணீர் எடுக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டு 5க்கும் மேற்பட்டோர் இறந்து போனதாகச் சொல்லும் போது நெஞ்சம் பதறத்தான் செய்கிறது.இராமநாதபுரம் பெரிய கண்மாய் நிறைந்து வருடக்கணக்கு ஆகின்றது. இம்மாவட்டத்தில் 41,488 கண்மாய்கள் இருந்தன. தற்போது ஆக்கிரமிப்பால் 5000 குளங்கள் காணாமல் போய்விட்டன. அனைத்து கண்மாய்களும் அரசாங்கத்தால் தூர் வாரப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கடலூர்
கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல; சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது வீரநாராயண(வீராணம்) ஏரியாகும். இதன் கொள்ளளவு 47.5 அடி. 2013 ஆம் ஆண்டிலிருந்து சென்னைக்கு 74 கனஅடி நீர் இந்த அணையிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. நெய்வேலி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஏரிக்கு வருவதால் எப்போதும் தண்ணீரோடு தான் காட்சி அளிக்கும். கோடைக்காலத்திற்கு சென்னை மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுவது வீராணம் ஏரிதான்.கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கை கொடுக்கிறது.ஆனால், இன்னும் வீரநாராயண ஏரியை ஆழப்படுத்தினால் கொள்ளளவை அதிகப்படுத்த முடியும். விவசாயத்திற்கும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் கூடுதலாகதண்ணீர் வழங்க முடியும்.கடந்த 2 ஆண்டு களுக்கு முன்னதாக 44 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டு, முழுமையாக செயல்படுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சில பகுதிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலை இருந்தாலும் காட்டுமன்னார் கோவில் உட்பட சுமார் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும், குறிப்பாக உப்புத்தண்ணீர் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகி வருகிறது. அதைப்போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தருமபுரி
கடந்த 6 மாத காலமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. பஞ்சப்பள்ளி அணையி லிருந்துதான் தருமபுரி நகராட்சிக்கு தண்ணீர் கிடைக்கிறது. 2008ல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் துவங்கப்பட்டது. ஆனால் குடிநீர் பஞ்சம் தீர்ந்தபா டில்லை. விவசாயம் பொய்த்துப் போனதாலும் வறட்சி அதிமானதாலும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்ட காரணங்களாலும் ஏராளமான மக்கள் கர்நாடக மாநிலத்திற்கு புலம் பெயர்ந்து செல்கிறார்கள்.
மதுரை
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். வைகை உள்ளிட்ட 15 ஆறுகள் இருக்கின்றன. ஆனாலும் நகரில் 4 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் கிடைக்கிறது. சமயநல்லூர், வாடிப்பட்டி பகுதிகளில் தென்னை, நெல் விவசாயம் தான் அதிகம். ஆனால் ஆறுகளில் மணல் அதிகமாக கொள்ளை போவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. செல்லூர் கண்மாயில் நீர்தேக்கம் இல்லை. குளங்களில் கழிவுநீர், குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் அதிகளவில் மாசுப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சி பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் வழியாக 44 மேல்நிலைத் தொட்டிகள், 256 ஆழ்துளை கிணறுகள், 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 36 லாரிகள்,6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிராக்டர்கள் மூலமாக தண்ணீர் விநியோகப்பட்டு வருவதாக நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டாலும் அனைத்து வார்டுகளிலும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படாமல் தான் உள்ளது. மாநக ரின் விரிவாக்கப்பகுதிகளில் மாநகராட்சியின் சுவடே இல்லை. தனியார் குடிநீர் லாரிகளை நம்பித்தான் மக்கள் உள்ளனர். நிலத்தடி நீர் குறைந்ததால், வீட்டு உபயோகத்திற்கும் தனியாரிடம் விலைக்கு வாங்கும் அவலம் உள்ளது.
வேலூர்
நீர்மட்டம் மிக மிகக் குறைவான மாவட்டம் என்றால் அதுவேலூர் தான். பாலாறு இருந்தாலும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத் தில் ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படவில்லை. குறிப்பாக ஈச்சங்காடு, முல்லைநகர், காமராஜ்நகர், குமரன் நகர், குடியாத்தம் போன்ற பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகம். இப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் 5 கி.மீ நடந்து சென்று தான் குடிதண்ணீர் கொண்டுவர வேண்டும். அதிகாலை 3 மணிக்கே தண்ணீர் எடுக்கச் செல்லும் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
கரூர்
காவிரி, அமராவதி, நொய்யல் ஆறுகள் இருந்தாலும் சில இடங்களில் சாயக்கழிவுகளால் தண்ணீர் மாசுப்பட்டு மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் போன்றபகுதிகளில் தண்ணீர் பிரச்சனை 3 மாதகாலமாக உள்ளது.
திருச்சி
காவிரி ஓடும் திருச்சியில் தண்ணீர் பிரச்சனை குறிப்பாக மணப்பாறை, மருங்காபுரி, துவரங்குறிச்சி, திருவெறும்பூர், பழங்கனாகுடி போன்ற இடங்களில் கடந்த 4 மாதங்களாக தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீருக்காக அலைவதற்கு பல மணி நேரங்களை செலவு செய்யும் நிலை. மேலும் முக்கொம்பு அணை உடைந்து போனதால் தண்ணீர் தேக்கம் இல்லாமல் கடுமையான தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்பட்டது என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
திண்டுக்கல்
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், காமராஜர் அணை, பேரணை, ஒடுக்கம் எனப் பல இருந்தாலும்திண்டுக்கல் மாநகர் மட்டுமல்ல; புறநகருக்கும் குடிநீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. ஜிக்கா குடிநீர் இணைப்பு திட்டம் திண்டுக்கல் மாநகருக்கு வந்ததும் 15 நாளைக்கு ஒருமுறை வந்த குடிநீர் தற்போது தினந்தோறும் வருகிறது. ஆனாலும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சில வீடுகளுக்கு தண்ணீர் வந்தும் சில வீடுகளுக்கு தண்ணீர் வராத நிலையும் உள்ளது. இன்னும் பல வார்டுகளில் ரூ.5க்கும் ரூ.10க்கும் தண்ணீர் விலைக்கு வாங்கும் அவலநிலை உள்ளது. திண்டுக்கல் புறநகர்ப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலை தான். கழிவு நீர் குழாயிலிருந்து தண்ணீர் பிடிக்கும் நிலை, குடிதண்ணீரோடு கழிவு நீர் வரும் அவலம், குழாய் பதிக்கும் வாய்ப்பு இருந்தும் கிராமங் களில் குழாய் பதிக்கப்படாமல் இருக்கும் நிலை என தினந்தோறும் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல சில மாவட்டங்களின் நிலைமைதான். தமிழகம் முழுவதும் இதே கதிதான்.கிராமங்களில் அதிகாரிகள் உள்ளாட்சி நிதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என புலம்பும் நிலை தான் தொடர்ந்து நீடித்து வருகிறது.
தமிழக அரசைப் பொறுத்தவரை தனது ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதி லேயே காலத்தைப் போக்கிக் கொண்டுள்ளது. இப்போதேனும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி உள்ளாட்சி மன்றங்களை உடனடியாக உருவாக்கிஅதன்மூலம் மக்களின் குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி கவனம் செலுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. இன்னும் குறிப்பாக, இந்த கோடை காலத்திலேனும் நீர்நிலைகள் அனைத்தையும் முறையாக, நேர்மையாக தூர்வாரி, அடுத்து மழை பெய்யும்போதாவது நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தனியார் குடிநீர் லாரிகள் மற்றும் குடிநீர் நிறுவனங்களால் தண்ணீர் சப்ளை செய்ய முடிகிற போது அரசு நிர்வாகத்தால் ஏன் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாது என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.தமிழக அரசைப் பொறுத்தவரை தனது ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதி லேயே காலத்தைப் போக்கிக் கொண்டுள்ளது. இப்போதேனும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி உள்ளாட்சி மன்றங்களை உடனடியாக உருவாக்கிஅதன்மூலம் மக்களின் குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி கவனம் செலுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. இன்னும் குறிப்பாக, இந்த கோடை காலத்திலேனும் நீர்நிலைகள் அனைத்தையும் முறையாக, நேர்மையாக தூர்வாரி, அடுத்து மழை பெய்யும்போதாவது நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தனியார் குடிநீர் லாரிகள் மற்றும் குடிநீர் நிறுவனங்களால் தண்ணீர் சப்ளை செய்ய முடிகிற போது அரசு நிர்வாகத்தால் ஏன் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாது என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.