tamilnadu

img

ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு வீடு திரும்பிய 3 பேர் விபத்தில் பலி


சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு வீடு திரும்பிய 3 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் சின்னசேலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கார் விபத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


;