புதுதில்லி,நவ.22- இந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு கள் உருவாகின்றன என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக வெள்ளியன்று மக்க ளவையில் கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பதிலளிக்கை யில், நாடு முழுவதும் தினமும் 25 ஆயிரம் டன்களுக்கும் அதிக மான பிளாஸ்டிக் கழிவுகள் உரு வாகின்றன. அவற்றில் 40 சதவீத கழிவுகள் சேகரிக்கப்படாமல், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் துறை யில், பிளாஸ்டிக் பயன்பாடு அதி கரித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக்கின் தேவையும் பெரு மளவு உயர்ந்துள்ளது. இது மறை முகமாக பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மைக்கு சவாலாக உள்ளது என்று தெரிவித்தார்.