tamilnadu

img

தீ.ஒ.மு. மாநாடு வரவேற்புக் குழுக்கள் அமைப்பு

தஞ்சாவூர், ஜூலை 22- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3 ஆவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 15,16,17 ஆகிய 3 நாட்கள் பேரணி, பொதுக்கூட் டத்துடன் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறி ஞர் வீ.கருப்பையா தலைமையில் நடைபெற்றது.  கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு ஆகியோர் பேசினர். கூட்டத்தில் வரவேற்பு குழு தலை வராக பரமசிவம், செயலாளராக வீ.கருப்பையா, பொருளாளராக ஆர்.எஸ்.வேலுச்சாமி, துணைத் தலைவர்களாக எம்.வேலுச்சாமி, ஆர்.மாணிக்கம், கே.சி.ஆவான், தமிழன், சிலுவை முத்து, துணைச் செயலாளர்களாக வி.ரெங்கசாமி, வி.மாரிமுத்து, கருப்பையா, சுந்த ரம், ராஜாமுகமது உள்ளிட்ட 50 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக் கப்பட்டது.  பட்டுக்கோட்டையில் நடை பெற்ற வரவேற்புக் குழு அமைப்பு கூட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். சிவகுரு, எம். செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக் குழுத் தலைவராக மோரிஸ் அண்ணாதுரை, செயலாளராக எஸ்.பாலகிருஷ்ணன், பொருளாளராக கே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் எஸ். பாலகிருஷ்ணன், சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிர மணியன், முருக. சரவணன், வங்கி ஊழியர் சங்கம் தி.தனபால், எல்ஐசி பாலகிருஷ்ணன், பக்கிரிசாமி, வாலி பர் சங்கம் ஒன்றியச் செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை, ஆசிரியர் மணிமாறன், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர் சங்கம் கல்யாணம், கட்சி கிளைச் செயலாளர்கள் கே.பாண்டியன்,  செந்தில், ஞானசேகரன், பாலசுப்பிர மணியன், தமிழ்ச்செல்வன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.