ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலைக்கு காவித் துண்டு, தலையில் தொப்பியும் அணிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.