tamilnadu

தஞ்சை புத்தகத் திருவிழா

 தஞ்சாவூர் ஆக.10- தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா வரும் ஆக.17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது. புத்தக திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் வெளியீட்டாளர் சங்கமும், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமமும், ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர். தென்னக பண்பாட்டு மையம் மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் தினமும் மாலை 8 முதல் 9 மணி வரை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.