tamilnadu

img

மூத்த தோழர் அதம்பை சி.இளஞ்செழியன் காலமானார்....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், அதம்பையைச் சேர்ந்த மூத்த கட்சித் தோழர்சி.இளஞ்செழியன் (76) வெள்ளிக் கிழமைஅன்று உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார்.

இவருக்கு ஸ்டாலின், சந்திரமோகன் என இருமகன்கள் உள்ளனர். தோழர் சி.இளஞ்செழியன் பட்டுக்கோட்டை தாலுகா கமிட்டி செயலாளராகப் பணியாற்றியவர். இவர் கடந்த 1978ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, தோழர்கள் ஏ.முத்துசாமி, என்.ஏ.சர்மா,  ஏ.கோவிந்தசாமி ஆகிய தலைவர்களுடன் 288 பேருடன் சிபிஎம்மில் இணைந்தார். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள் இணைந்து டிவிஷன்ஸ் பெஞ்சாக செயல்பட்டு, பின்னர்கட்சி தனித்தனி தாலுகா கமிட்டியாக பிரிக்கப்பட்ட போது பட்டுக்கோட்டை தாலுகா கமிட்டி செயலாளராக பணிபுரிந்தார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் - சங்கத்தின் கிளைச்செயலாளராகவும் திறம்பட பணி யாற்றியவர். இவர் காலத்தில்தான், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் பொன்விழா ஆண்டு இவரது தலைமையில் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது. இவ்விழாவில் தோழர்கள் ஏ.நல்லசிவன், கே.சங்கரய்யா, கே.முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாதது என மாவட்டக்குழு சார்பாக மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சிபிஎம் மூத்த தலைவரும், மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான ஆர்.சி.பழனிவேலு, ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், ஏ.கோவிந்தசாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, ஒன்றியத் தலைவர் மோரிஸ் அண்ணாதுரை, கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் முருக.சரவணன், வீரப்பன், ஆறுமுகம், செல்வராஜ் ஆகியோர் மறைந்த தோழரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.

;