தஞ்சாவூர், ஜூலை 21- தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு தஞ்சையில் சனிக் கிழமை நடந்தது, மாநாட்டிற்கு முனை வர் இராம் மனோகர் தலைமை வகித்தார். கடந்த இரண்டு ஆண்டு நடைபெற்ற பணிகள் தொடர்பான அறிக்கையை மாவட்டச் செயலாளர் முனைவர் சுகுமாரன் பேசினார். பொரு ளாளர் ரமேஷ் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். 158 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைத்து கிளைச் செயலாளர்களும், கிளை செயல்பாடு குறித்து பேசினர். புதிய தலைவராக வி.நாராயண சாமி, செயலாளராக எல்.முருகன், பொருளாளராக பி.ரமேஷ், துணைத் தலைவர்களாக க.மகேந்திரன், செல் வம், வ.முருகானந்தம், என்.ராஜா, என்.சிவகுமார், துணைச் செயலா ளர்களாக முனைவர் வி.சுகுமாரன், சிவ குமரன், கே.கே.தியாகராஜன், கவிதா, சாவித்திரி, ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் பி.இராம்மனோகர், வீ.ராஜ சேகர் ஆகியோர் மாவட்ட நிர்வாகி களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக அனைத்து கிளைச் செயலாளர்களும், கூடுதலாக தலைமை ஆசிரியர்கள் மு.மாலதி, கீதா, ரவிச்சந்திரன், தமிழ் வாணன், தனராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், பொருளா ளர் சி.சுப்பிரமணி ஆகியோர் பார்வை யாளர்களாக கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் ஏ. அமல்ராஜன், மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.தியாகராஜன், ஐபிஇஏ பள்ளி குழுமத்தைச் சார்ந்த சோமசுந்தரம், பாலசந்திரன் மற்றும் தஞ்சை மாவட்ட நுகர்வோர் பாது காப்பு சங்கச் செயலர் அடைக்கலம், தமுஎகச மாநிலப் பொறுப்பாளர் களப் பிரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிவியல் இயக்கம் சிறப்பாக இயங்கும் பொருட்டு மருத்துவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு சமூக ஆர்வலர்களை ஆலோசகர்களாக வைத்துக் கொள்வது என தீர்மா னிக்கப்பட்டது. நிறைவாக தஞ்சை மாந கரச் செயலாளர் வி.கே.மோகன் நன்றி கூறினார்.